by Staff Writer 17-04-2019 | 8:10 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த சில விமானங்கள் சீரற்ற வானிலை காரணமாக மத்தளை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கட்டுநாயக்க பகுதியில் இன்று பிற்பகல் 4 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் இதனால் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் நியூஸ்ஃபெஸ்ட்டின் விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த 4 விமானங்களை மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்க விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கமைய ஜகார்த்தா, கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் கட்டாரில் இருந்து வருகை தந்த விமானங்கள் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் விமான நிலைய செய்தியாளர் கூறினார்.