யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி மூவர் பலி

by Staff Writer 16-04-2019 | 4:53 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். புகையிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 38 வயதான ரவிக்குமார் சுதா, 52 வயதான கந்தசாமி மைனாவதி ஆகிய பெண்களும் 48 வயதான திருநாவுக்கரசு கண்ணன் என்பவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்