களனிவௌி மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்

களனிவௌி மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்

by Staff Writer 16-04-2019 | 8:27 AM
Colombo (News 1st) அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று நுகேகொட மற்றும் நாரஹென்பிட்டவுக்கு இடையில் தடம்புரண்டுள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் குறித்த ரயில் தடம்புரண்டதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் களனிவௌி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமாகியதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அவிசாவளையில் இருந்து கொழும்பு வரையிலான ரயில் சேவை நுகேகொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தடம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்