மரக்கன்று நடும் சுபவேளை இன்று

மரக்கன்று நடும் சுபவேளை இன்று

by Fazlullah Mubarak 15-04-2019 | 8:12 AM

தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டின் மரக்கன்று நடும் சுபவேளை இன்று இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 11.17 மணிக்குஇந்த சுபவேளை உதயமாவதுடன் வெள்ளை நிற ஆடை அணிந்து கிழக்கு திசை நோக்கி மரக்கன்று நடுவது சிறந்தது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. சுபவேளையில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால சந்ததியினருக்கும் சூழலுக்கும் தமது பிரஜைகள் என்ற பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.