பின்லாந்து தேர்தலில் இடதுசாரித் தரப்பு வெற்றி

பின்லாந்து தேர்தலில் இடதுசாரித் தரப்பு வெற்றி

by Fazlullah Mubarak 15-04-2019 | 8:31 AM

பின்லாந்து பொதுத் தேர்தலில் அந்நாட்டின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த பின்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக பின்லாந்து இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் Antti Rinne அறிவித்துள்ளார். தேர்தலில் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகவாதிகள் தரப்பினர் 17.7 சதவிகித வாக்குகளையும் யூரோ செப்டிக் ஃபின்ஸ் கட்சி 17.5 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளனர். 99.5 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதமர் ஜூஹா சிபிலா மற்றும் அவருடன் கூட்டிணைந்துள்ள வலதுசாரி தேசிய கூட்டணி ஆகியன 13.8 சதவிகித வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளன. சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான Antti Rinne, 56 வயதுடைய ஒரு தொழிற்சங்க வாதி என்பது குறிப்பிடத்தக்கது.