விசேட ரயில் சேவைகள் இன்றும் தொடர்கின்றன

விசேட ரயில் சேவைகள் இன்றும் தொடர்கின்றன

by Fazlullah Mubarak 14-04-2019 | 5:32 PM

இன்றைய தினமும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7.40 மணிக்கு மருதானை முதல் களுத்துறை வரையில் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. முற்பகல் 10.45 மணிக்கு மருதானை முதல் களுத்துறைக்கு மற்றுமொரு ரயிலொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், களுத்துறை, வெயாங்கொட, கோட்டை பகுதிகளுக்கான ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, இன்றைய தினம் பயணிகளின் வசதி கருதி போதுமானவளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பயணிகளின் நலன் கருதி அனைத்து பஸ் நிலையங்களுக்கு அருகிலும் பஸ்களை நிறுத்துமாறு தூர சேவைகளில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.