ராகுல் காந்தியின் ஹெலிகொப்டருக்கு அனுமதி மறுப்பு

ராகுல் காந்தியின் ஹெலிகொப்டருக்கு அனுமதி மறுப்பு

by Fazlullah Mubarak 14-04-2019 | 5:47 PM

மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தியின் ஹெலிகொப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அவர் பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் சிலிகுரியில், தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி, ஹெலிகொப்டரில் செல்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. சிலிகுரி மாநகர பொலிஸ் அத்தியட்சகர் மைதானத்தில், ராகுல் காந்தியின் ஹெலிகொப்டர் தரையிறங்குவதற்கு திட்டமிட்டிருந்தபோதிலும், அங்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.