இன்றும் சிறைக்கைதிகளை பார்வையிடும் சந்தர்ப்பம்

இன்றும் சிறைக்கைதிகளை பார்வையிடும் சந்தர்ப்பம்

by Fazlullah Mubarak 14-04-2019 | 5:30 PM

தமிழ் சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்றும் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை உறவினர்களை பார்வையிடுவதற்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரீ.எம்.ஜே.டபிள்யூ. தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். உரிய அனுமதி பெற்று கைதிகளை விடுவிப்பதற்காக சிறைக்கைதிகள் 11 பேரின் பெயர் விபரங்கள் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.