செவனகலயில் உறங்கிக்கொண்டிருந்த இருவர் வெட்டிக்கொலை

செவனகலயில் உறங்கிக்கொண்டிருந்த இருவர் வெட்டிக்கொலை

by Staff Writer 13-04-2019 | 4:05 PM
Colombo (News 1st) செவனகல - நுகேகலயாய பகுதியில் கூடாரமொன்றினுள் உறங்கிக்கொண்டிருந்த இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4 மணி முதல் 7.30 மணிக்கிடையில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுகேகலயாய மற்றும் கிரிவெவ பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 54 வயதுடைய இருவரே கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.