விபத்தில் வௌ்ளவத்தை பெண் பலி

ஆராச்சிக்கட்டுவயில் இடம்பெற்ற விபத்தில் வௌ்ளவத்தை பெண் பலி

by Bella Dalima 13-04-2019 | 3:31 PM
Colombo (News 1st) புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் வேனொன்று எண்ணெய் தாங்கி பவுசரொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. வௌ்ளவத்தையை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏனைய செய்திகள்