மாலைதீவில் கைதான இலங்கை மீனவர்கள் நாட்டுக்கு வருகை

மாலைதீவில் கைதான இலங்கை மீனவர்கள் நாட்டுக்கு வருகை

by Staff Writer 11-04-2019 | 11:14 AM
Colombo (News 1st) மாலைதீவில் கைது செய்யப்பட்ட 21 இலங்கை மீனவர்களும் இன்று (11ஆம் திகதி) நாட்டிற்கு திருப்பியனுப்படவுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது. வௌிநாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை, புதுவருடத்திற்கு முன்னர் நாட்டிற்கு திருப்பியழைப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி குறிப்பிட்டுள்ளார். அரபுக்கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் நாட்டின் எல்லைப்பகுதிக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில், கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மாலைதீவு கடலோரப் பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்