தென் மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

தென் மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

by Staff Writer 11-04-2019 | 7:28 AM
Colombo (News 1st) தென் மாகாண சபையின் பதவிக்காலம் ​நேற்று (10ஆம் திகதி) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இதற்கமைய, தென் மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்ததுடன், வடமேல் மற்றும் வட மாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நிறைவடைந்தது. இந்தநிலையில், மேல் மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவடையுள்ளதுடன் ஊவா மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயரை வலியுறுத்தியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.