தங்க பிஸ்கட் கடத்தல்: விமான சேவை பணியாளர் கைது

தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற ஶ்ரீலங்கன் விமான சேவை பணியாளர் கைது

by Staff Writer 11-04-2019 | 4:30 PM
Colombo (News 1st) தங்க பிஸ்கட்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வௌியில் கொண்டு செல்ல முயன்ற ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் அலுவலக பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது கால்களுக்குள் மிக சூட்சுமமாக மறைத்து வைத்து தங்க பிஸ்கட்களை கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார். சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்கள் 3 கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியானது என சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஶ்ரீலங்கன் விமான சேவையில் பணிபுரியும் வத்தளை பகுதியை சேர்ந்த 23 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.