by Staff Writer 11-04-2019 | 7:49 AM
Colombo (News 1st) இந்திய பொதுத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (11ஆம் திகதி) ஆரம்பமாகின்றது.
91 மக்களவை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஆந்திரபிரதேஷ், தெலுங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இடம்பெறுகின்றது.
இன்று ஆரம்பமாகி, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்திய மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது.
இம்மாதம் 11, 18, 23, 29 ஆம் திகதிகளிலும் அடுத்த மாதம் 6, 12, 19 ஆம் திகதிகளிலும் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வாக்கெண்ணும் பணிகள் மே மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி அருதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.