SLFP மற்றும் SLPP இடையே பேச்சுவார்த்தை இன்று

ஶ்ரீலங்கா சுதந்திக் கட்சி - ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே பேச்சுவார்த்தை

by Staff Writer 10-04-2019 | 11:14 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையில் புதிய அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று (10ஆம் திகதி) இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோருடன் பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியரர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவது தொடர்பில் அடிப்படை கொள்கை வரைபு தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு உத்தேசித்துள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.