யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து பீடம்

யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது

by Staff Writer 10-04-2019 | 5:31 PM
  Colombo (News 1st) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக இந்து பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் தெரிவித்தார். மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளைக் கொண்ட இந்து பீடத்தில் இந்து நாகரீகம், சைவ சித்தாந்தம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய கற்கை நெறிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் கூறினார். பல்கலைக்கழக புதிய அனுமதியின் பின்னர் இந்து பீடத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.