சபையை கலைக்கும் வர்த்தமானியில் ஆளுநர் கையொப்பம்

தென் மாகாண சபையை கலைப்பதற்கான வர்த்தமானியில் மாகாண ஆளுநர் கையொப்பம்

by Staff Writer 10-04-2019 | 1:40 PM
Colombo (News 1st) தென் மாகாண சபையைக் கலைப்பதற்கான வர்த்தமானியில் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் கையொப்பமிட்டுள்ளார். தென் மாகாண சபையின் பதவிக்காலம் இன்று (10ஆம் திகதி) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இதற்கமைய, தென் மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்ததுடன், வட மேல் மற்றும் வடமாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத்தில் நிறைவடைந்தது. மேல் மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி நிறைவடையுள்ளதுடன் ஊவா மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயரை வலியுறுத்தியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.