ரயில்வே தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

by Staff Writer 09-04-2019 | 8:23 PM
Colombo (News 1st) சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே கண்காணிப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் மற்றும் ரயில் கண்காணிப்பு முகாமைத்துவ ஒன்றியம் ஆகியன இணைந்து முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தனியார் பஸ் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தண்டப்பணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். எனினும், பஸ் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.