by Staff Writer 09-04-2019 | 7:06 AM
Colombo (News 1st) ரயில்வே கண்காணிப்பு நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் குழு மற்றும் ரயில்வே கண்காணிப்பு முகாமைத்துவ குழுவினர் இன்று (9ஆம் திகதி) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று முதல் விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்கள் இவ்வாறு அறிவித்துள்ளனர்.
இதேவேளை, தமது பிரச்சினை தொடர்பில் இன்று இடம்பெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.