மீன் வளர்ப்பை முன்னெடுக்க திட்டம்

மத்திய மாகாணத்தில் மீன் வளர்ப்பை முன்னெடுக்க திட்டம்

by Staff Writer 09-04-2019 | 11:11 AM
Colombo (News 1st) மத்திய மகாணத்தில் சிறு நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மீன் வளர்ப்​பை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறு நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மீன்பிடி குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான மூலதனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் தெரிவுசெய்யப்பட்ட சிறு நீர்த்தேக்கங்களில் ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.