பண்டிகைக் காலத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

by Staff Writer 09-04-2019 | 8:52 AM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை பொலிஸார் சிவில் ஆடைகளில் பஸ்களில் சோதனையில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சில சாரதிகள் தொலைபேசியில் பேசிய வண்ணம் ஒரு கையினால் வாகனத்தை செலுத்துவதாகவும் சிலர் மதுபோதையில் பஸ்களை செலுத்துவதுடன் தூரப்போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பஸ்கள் நிறுத்துமிடங்களில் பஸ் சாரதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான குற்றச்செயல்களைக் கண்டறியும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.