நீர்கொழும்பில் நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது

by Staff Writer 09-04-2019 | 10:50 AM
Colombo (News 1st) நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிய பகுதியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு கிலோ 8 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.