by Staff Writer 09-04-2019 | 8:18 PM
Colombo (News 1st) நாட்டில் மின்சார மாஃபியா இடம்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று பகிரங்கமாகக் கூறினார்.
மின்சார சபையில் இருந்தவர்களே அங்கிருந்து விலகிச் சென்று தனியார் பிரிவில் மின்பிறப்பாக்கிகளை தயாரித்துக் கொண்டு, அதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு மின்சார மாஃபியா ஊடாக மின்சாரத்தை விற்பனை செய்வதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.