ஈரானிய பாதுகாப்புப் படை தீவிரவாத அமைப்பாகியது

ஈரானிய பாதுகாப்புப் படையை தீவிரவாத அமைப்பாக பெயரிட்டது அமெரிக்கா

by Staff Writer 09-04-2019 | 11:20 AM
Colombo (News 1st) ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை, வௌிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரிட்டுள்ளார். அமெரிக்கா வேறொரு நாட்டின் இராணுவப் படையை தீவிரவாத அமைப்பாக பெயரிட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகின்றது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்கப் படைகளை தீவிரவாத அமைப்புக்கள் என பெயரிட்டு ஈரான் பதிலளித்துள்ளதாக, அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. ஈரானின் சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.