கோட்டாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல்

கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

by Staff Writer 08-04-2019 | 8:11 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வௌியிட்டுள்ளது. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்ஸா விக்ரமதுங்க அமெரிக்க நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாக, பி.பி.சி. வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நியாயமான திட்டம் எனப்படும் ITJP அமைப்பும் கலிபோர்னிய பிராந்திய நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்