இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவைநீக்கம்

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவைநீக்கம்

by Fazlullah Mubarak 08-04-2019 | 8:07 AM

கொஸ்கம, பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற விடயம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் மில்லிகிராம் 1050 மற்றும் 1020 வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொஸ்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் கொஸ்கம பொலிஸ் நிலையத்தின் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் கடமைநேர பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இவ்வாறு சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தப்பிச்சென்ற கைதிகள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.