by Staff Writer 07-04-2019 | 11:15 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பூம்புகார் கடற்கரையில் 8 கிலோ 200 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைக்காக கிளிநொச்சி தலைமையக பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கக்கப்பட்டுள்ளார்.