ஈர வலயங்களில் புதிய நீர்த்தேக்கங்கள் நிர்மானம்

ஈர வலயங்களில் புதிய நீர்த்தேக்கங்களை நிர்மானிக்க தீர்மானம்

by Staff Writer 07-04-2019 | 1:50 PM
Colombo (News 1st) நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஈர வலயங்களில் புதிய நீர்த்தேக்கங்களை நிர்மானிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடைக்கிடையே ஏற்படும் வறட்சி காரணமாக ஈரவலயங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்நிலைகள் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார். ஈர வலயங்களில் அதிகளவு உணவு உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள பணிப்பாளர், வறட்சி காரணமாக உணவு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக, மகாவலி மற்றும் களனி ஆற்றை அண்மித்த பகுதிகளில் புதிய நீர்த்தேக்கங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்நிலைகள் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன சுட்டிக்காட்டியுள்ளார்.