இலங்கை மீனவர்களை மீள அனுப்ப மாலைத்தீவு இணக்கம்

கைதான இலங்கை மீனவர்களை நாட்டிற்கு அனுப்ப மாலைத்தீவு இணக்கம்

by Staff Writer 06-04-2019 | 4:42 PM
Colombo (News 1st) மாலைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 25 பேரையும் புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் நாட்டிற்கு அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலை அண்மித்த கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு நாடு திரும்பிய குறித்த இலங்கை மீனவர்கள், மாலைத்தீவு கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் மாலைத்தீவு தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்மீனவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்காக தற்காலிக விசாக்களை தயாரிப்பதற்கு தேவையான நிதியை மாலைத்தீவு வௌிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவின் உதவிப் பணிப்பாளர் பத்மப்பிரிய திசேரா தெரிவித்தார்.