by Staff Writer 06-04-2019 | 4:27 PM
Colombo (News 1st) அநுராதபுரம் - புத்தளம் வீதியின் 38 ஆம் கட்டையை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து நொச்சியாகம நோக்கிப் பயணித்த வேனொன்று, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புனர்நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் மீது மோதி விபத்திற்குள்ளகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.