by Bella Dalima 05-04-2019 | 5:58 PM
தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் கடந்த வருடம் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். பிறகு அவர் மிஸ் வேர்ல்ட் 2018 போட்டியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில், அவர் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
சாக்லேட் படத்திற்கு பிறகு பிரசாந்த் - இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இணையும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனுக்ரீத்தி.
இந்தப் படத்தில் பூமிகா, பிரகாஷ் ராஜ், நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் போன்றோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார்.
இப்படத்துக்கு சேலஞ்ச் எனப் பெயரிடப்பட்டுள்ளது.