18 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

by Staff Writer 05-04-2019 | 7:55 PM
Colombo (News 1st) இலங்கை கடல் எல்லையை மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை பருத்தித்துறை நீதவான் நலனி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 18 பேரும் கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 3 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.