உலர் பழ வகை ஏற்றுமதிக்காக இத்தாலியுடன் ஒப்பந்தம்

உலர் பழ வகை ஏற்றுமதிக்காக இத்தாலியுடன் ஒப்பந்தம்

by Staff Writer 05-04-2019 | 5:48 PM
Colombo (News 1st) உலர் பழ வகைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. வௌிநாடுகளில் உலர் பழ வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக, பழ வகைகளை உலரச் செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதற்காக இத்தாலி அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.