வறட்சியால் முல்லைத்தீவு மாவட்டம் அதிகளவில் பாதிப்பு

by Staff Writer 04-04-2019 | 1:12 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையால் முல்லைத்தீவு மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முல்லைத்தீவு - பொன்னகர் பகுதி மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய அசௌகரியங்ளை எதிர்நோக்கி வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யாமையினால் கிணறு மற்றும் குளங்கள் வற்றியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், வறட்சி காரணமாக பயிர்நிலங்கள் மற்றும் கால்நடைகள் நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் இதனால் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.