நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

by Staff Writer 04-04-2019 | 9:17 AM
Colombo (News 1st) வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்கு, விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 13,600 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை மேற்கொள்ள விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், 24,000 மெட்ரிக்தொன் நிலக்கடலையை அறுவடை செய்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.