by Bella Dalima 03-04-2019 | 10:15 PM
Colombo (News 1st) புறக்கோட்டை, மூன்றாம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று தீ பரவியது.
தீயினைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர 8 தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.
தற்போது தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை.
அணிகலன்களை விற்பனை செய்யும் கடை ஒன்றிலேயே தீப்பற்றியுள்ளது.