தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட கையெழுத்து ஆவணம் ஒப்படைப்பு

by Staff Writer 03-04-2019 | 7:20 PM
Colombo (News 1st) மலையக தன்னெழுச்சி இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய ஆவணம், பிரித்தானிய தூதரகம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தன்னெழுச்சி இளைஞர்களால் கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டன. மக்களின் கையெழுத்துகள் அடங்கிய ஆவணம் இன்று முற்பகல் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, பிரித்தானிய தூதரகத்திற்கு சென்ற தன்னெழுச்சி இளைஞர்கள் கையெழுத்துகள் அடங்கிய ஆவணத்தைக் கையளித்தனர்.