வாழைச்சேனையில் நபர் ஒருவர் எரித்துக் கொலை

வாழைச்சேனையில் நபர் ஒருவர் எரித்துக் கொலை

by Staff Writer 02-04-2019 | 8:53 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் நபர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வாழைச்சேனை - கண்ணகிபுரத்தை சேர்ந்த 58 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சந்தேகநபரைப் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்துள்ளதாகவும் அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் விசாணைளை முன்னெடுத்து வருகின்றனர்.