உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் உபுல்அலவத்த மன்றில் ஆஜர்

மன்னார் மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் ஆஜர்

by Staff Writer 02-04-2019 | 7:52 AM
Colombo (News 1st) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபரை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பில் மன்னார் மாவட்டத்துக்கு பொறுப்பான உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் உபுல் அலவத்த, இன்று (3ஆம் திகதி) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி பிலியந்தல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கடத்திச்சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் உபுல் அலவத்த நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று அவர் அழைக்கப்பட்டிருந்ததுடன், விசாரணைகளின் நிறைவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் உபுல் அலவத்த குறித்த அந்தக் காலப்பகுதியில் பிலியந்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.