பொரளை விபத்து: டிபென்டர் சாரதிக்கு பிணை

பொரளை விபத்து: டிபென்டர் சாரதிக்கு பிணை

by Staff Writer 01-04-2019 | 2:44 PM
Colombo (News 1st) பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த சாகர சரத்சந்திரவை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த டிபென்டர் வாகன சாரதி சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் 298ஆம் சரத்தின் கீழ் கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றங்களின் கீழ் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்துள்ளதாக மன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இந்த வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.