நாட்டில் தொடர்ந்தும் வெப்பமான காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் வெப்பமான காலநிலை

by Staff Writer 01-04-2019 | 4:15 PM
Colombo (News 1st) வட மேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை (2ஆம் திகதி) உஷ்னமான காலநிலை நிலவக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ள திணைக்களம், பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. உஷ்னமான காலநிலை நிலவும் சந்தரப்பங்களில் நிழலான இடங்களில் நடமாடுமாறும் அதிக நீர் பருகுமாறும் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகலில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. குருநாகலில் 38.4 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வவுனியாவில் 38.1 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் 37.6 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.