காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கை

காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கை விஸ்தரிப்பு

by Staff Writer 01-04-2019 | 6:05 PM
Colombo (News 1st) காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கையை விஸ்தரிப்பதற்கு, தென்மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில், ரத்கம, நியாகம, வதுரம்ப உள்ளிட்ட பிரதேசங்களில் அன்னாசி செய்கையை விஸ்தரிக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 30 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னாசி செய்கைக்காக, விவசாயிகள் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.