ஜனாதிபதி முன்னிலையில் இன்று கொக்கெய்ன் அழிப்பு

காற்றுடன் சங்கமமாகும் கொக்கெய்ன் - பகிரங்கமாக இன்று ஜனாதிபதி முன்னிலையில் எரிக்கப்படவுள்ளது

by Fazlullah Mubarak 01-04-2019 | 8:06 AM

பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 729 கிலோகிரேமிலும் அதிக கொக்கெய்ன் இன்று ஜனாதிபதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்கானிப்பின் கீழ் பகிரங்கமாக அழிக்கப்படவுள்ளது.

பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு பின் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அவை நிறைவடைந்த நிலையிலுள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் இவ்வாறு அழிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த களஞ்சியசாலையில் அவை திரவமாக மாற்றப்பட்டு பின்னர் அவை புத்தளம் சீமெந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு எரிக்கப்படவுள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதியும் இவ்வாறு 920கிலோ போதைப்பொருள் அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விதம் அழிக்கப்படும் போதைப்பொருட்கள் 2016 டிசம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.