மரணதண்டனைக்கான திகதி தயார் - ஜனாதிபதி அறிவிப்பு

மரணதண்டனைக்கான திகதி தீர்மானம் - ஜனாதிபதி அறிவிப்பு

by Fazlullah Mubarak 31-03-2019 | 9:00 PM

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கான திகதியை தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டலில் சர்வமத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று பிற்பகல் முகத்துவாரம் விட்ஸ்வைக் பூங்காவில் போதைப்பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.