வவுனியாவில் மரத்தளபாட விற்பனை நிலையத்தில் தீ பரவல்

by Staff Writer 30-03-2019 | 4:16 PM
Colombo (News 1st) வவுனியா - குருமன்காடு பகுதியிலுள்ள மரத்தளபாட விற்பனை நிலையமொன்றில் பாரிய அளவில் தீ பரவியுள்ளது. இதன் காரணமாக மன்னார் - வவுனியா பிரதான வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியிலுள்ள குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தில் பிற்பகல் 3.15 அளவில் தீ பரவியதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வவுனியா தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. வவுனியா தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.