by Staff Writer 29-03-2019 | 5:13 PM
Colombo (News 1st) மன்னாரின் தெற்கு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த பீடி சுற்றும் இலைகள் அடங்கிய பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
33 பொதிகளில் பொதியிடப்பட்ட 1456 கிலோ பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இவை சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை சந்தேகம் வௌியிட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளை யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பீடி சுற்றும் இலைகளுடன் 8 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 8000 கிலோகிராமிற்கும் அதிக பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.