மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: மூவர் பலி

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: மூவர் பலி

by Staff Writer 29-03-2019 | 10:33 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் வந்தாறுமூலை - பலாச்சோலை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்களே இரவு 8 மணியளவில் விபத்திற்குள்ளாகியுள்ளன. இதன்போது, மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.