தேசிய ஆளணிகள் ஆணைக்குழுவிற்கு புதிய நியமனங்கள்

தேசிய சம்பளங்கள், ஆளணிகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

by Staff Writer 29-03-2019 | 3:51 PM
Colombo (News 1st) தேசிய சம்பளங்கள், ஆளணிகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம், ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரான எஸ்.ரனுக்கே நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் செயலாளராக அமைச்சின் முன்னாள் செயலாளர் அநுர ஜயவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக சி.பி. சிறிவர்தன, கலாநிதி தமிதா சொய்ஸா, லலித் கன்னங்கர, ஜானக சுகததாச, சித்ராங்கனி வாகீஷ்வர, சந்திராணி சேனாரத்ன, கிங்ஸ்லி பெர்ணான்டோ, ஜி.எஸ் எதிரிசிங்க, எம்.சி.விக்ரமசேகர, டொக்டர் பாலித அபேகோன், சி.அபேசூரிய மற்றும் லெஸ்லி தேவேந்திர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்னனர்.