கெஹெலியவிற்கு எதிரான வழக்கு விசாரிக்கப்படவுள்ளது

கெஹெலியவிற்கு எதிரான அரச பணத்தில் தொலைபேசி கட்டணத்தை செலுத்திய வழக்கு விசாரிக்கப்படவுள்ளது

by Staff Writer 29-03-2019 | 3:58 PM
Colombo (News 1st) அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 2,30,000 ரூபாவை பயன்படுத்தி தனிப்பட்ட தொலைபேசி கட்டணத்தை செலுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதம நீதவான் நீதின்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை நிராகரித்த கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்