by Staff Writer 28-03-2019 | 11:59 AM
Colombo (News 1st) இந்த வருட இறுதிக்குள், 3 மில்லியன் சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுற்றுலாத்துறை ஊடாக இந்த வருடத்திற்குள் 5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
4 வருடங்களுக்குள் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.